உங்களுடன் ஸ்டாலின் திட்ட  முகாமை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அம்சவள்ளி வெங்கடேசன் துவக்கி வைத்தார்.!

கிருஷ்ணகிரி

உங்களுடன் ஸ்டாலின் திட்ட  முகாமை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அம்சவள்ளி வெங்கடேசன் துவக்கி வைத்தார்.!

பெத்ததாளப்பள்ளி கிராமத்தில் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடைப்பெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட  முகாமை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் அம்சவள்ளி வெங்கடேசன் துவக்கி வைத்தர்.

கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியம்,  பெத்ததாளப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பெத்ததாளப்பள்ளியில் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மதியழகன் அவர்களின் வழிக்காட்டுதலின்படி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் தனசேகரன் தலைமையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பெத்ததாளப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி அம்சவள்ளி வெங்கடேசன் கலந்துகொண்டு தமிழக அரசின் சிறப்பு மிக்க திட்டங்களின் ஒன்றான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

பின்னர் பெத்ததாளப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இந்த முகாமில் அனைத்து அரசு துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன.

மேலும் இந்த முகாமில் பெத்ததாளப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலைஞரின் மகளீர் உரிமை தொகை, வீட்டுமனைபட்டா, இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம், கல்விக் கடன், ரேசன் அட்டை , குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்வு காண வேண்டி துறைவாரியாக  மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கினார்கள். மேலும் இந்த சிறப்பு முகாமில் தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது.

மேலும் இந்த முகாமில் கிருஷ்ணகிரி  வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர் சண்முகம் உள்ளிட்ட அனைத்து துறை வாரியான அலுவர்களும் மற்றும் ஊராட்சி கழகப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ