23 வயது இளைஞரை கொலை செய்த சரித்திர பதிவேடு குற்றவாளி. !
புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் 23 வயது இளைஞரை மண்டையில் அரிவாளால் வெட்டியும், தாக்கியும் கொலை செய்து குளத்தில் வீசியிருப்பது பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட போஸ்நகரை சேர்ந்த இளைஞர் தினேஷ்குமார்(23). இவரது நண்பர்களான அய்யனார்புரம் மூன்றாம் வீதியை சேர்ந்த கார்த்திகேயன் (எ) புறா கார்த்தி போஸ் நகரைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் ஒன்பதாம் தேதி அன்று மது போதையில் ஏற்பட்ட பிரச்சனையில் சரித்திர பதிவேடு குற்றவாளியான காந்திநகர் இரண்டாம் விதியைச் சேர்ந்த முகிலன் (31) என்பவரை கையில் வெட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து முகிலனை வெட்டிய மூன்று நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சம்பந்தப்பட்ட மூன்று பேரும் சிறையில் இருந்து வெளியே வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இன்று புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட புதுக்குளம் அருகே காந்தி நகர் பகுதியில் உள்ள காளாகுளம் கரையில் இளைஞர் தினேஷ்குமார் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த முகிலன் மற்றும் அவருடைய நண்பர்கள் 12 பேர் சூழ்ந்த நிலையில் முகிலன் மட்டும் தினேஷ்குமாரை பட்டப் பகலில் அறிவாளாள் தலையில் தாக்கி காளாகுளத்தில் வீசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதன் பின்னர் குளத்தில் விழுந்த தினேஷ்குமார் வெளியே வராமல் இருந்த நிலையில் இது குறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற புதுக்கோட்டை கணேஷ் நகர் காவல் துறையினர் புதுக்கோட்டை தீயணைப்புத்துறை வீரர்கள் மூலம் குளத்திலிருந்து தினேஷ்குமாரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்துள்ள கணேஷ் நகர் காவல் துறையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முகிலனை தேடி வருகின்றனர். மேலும் முகிலனை கைது செய்து விசாரணை செய்தால் தான் முகிலுடன் வந்திருந்த அவரது நண்பர்களான 12 பேரும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களா அல்லது முகிலன் மட்டும்தான் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டாரா இந்த கொலை திட்டமிட்டு நடைபெற்றதா அல்லது எதிர்பாராத விதமாக பிரச்சனையின் போது ஏற்பட்டதா என்பது தெரியவரும். மேலும் பட்டப்பகலில் சரித்திர பதிவேடு குற்றவாளியாள் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு
97 87 41 64 86