வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவிகள் - தற்கொலைக்கான காரணம் தெரியாததால் போலீஸ் விசாரணை.!

Avinashi

வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட  கல்லூரி மாணவிகள் - தற்கொலைக்கான காரணம் தெரியாததால் போலீஸ் விசாரணை.!

திருப்பூர் மாவட்டம் அவினாசி பழங்கரை லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த மருதாசலமூர்த்தி என்பவருடைய மகள் அவந்திகா (வயது 19). திருப்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். அவந்திகா படித்து வந்த அதே கல்லூரியில் அவினாசி கங்கவர் வீதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் 19 வயது மகள் மோனிகாவும் படித்து வந்தார்.

இருவரும் ஒரே பாடப்பிரிவில் படித்து வந்ததால் படிப்பு செலவுக்காக அவந்திகாவும், மோனிகாவும் தினமும் கல்லூரிக்கு சென்று வந்த பிறகு அங்குள்ள பல்பொருள் அங்காடியில் வேலை பார்த்து வந்துள்ளனர்.

நேற்று பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் அவந்திகா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார் அப்போது, அவரை பார்க்க மோனிகா வந்துள்ளார்.

இந்த நிலையில், மாலையில் வீட்டில் உள்ள அறையில் தோழிகள் இருவரும் தனித்தனியாக தூக்கில் தொங்கியுள்ளனர்.

அவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் ஏதும் தெரியவில்லை.

இதுகுறித்து அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஒரே அறையில் தோழிகள் இருவரும் தூக்கில் தொங்கிய சம்பவம் அவினாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.