அந்த கால சினிமாவும், இந்த கால சினிமாவும்

அந்த காலகட்டத்தில் திரையரங்குகளில் ப்ரொஜக்ட்டர் ஆப்பரேட்டர் என்பவர்கள் இருப்பார்கள். அவர்கள்தான் படத்தோட உண்மையான எடிட்டர்கள்.
படம் ரிலீஸாகி இரண்டு மூன்று நாட்களில் ரசிகர்கள் மனநிலைய வைத்து படத்தை எடிட் பண்ணிடுவாங்க.
படத்தின் நீளத்தை குறைப்பது, பாடல்களை தூக்கி விடுவது என ஒவ்வொரு திரையரங்கலயும் ஒவ்வொன்னு நடக்கும்.
பாட்டு கொஞ்சம் மெலோடியா இருந்தாலே போர் அடிக்குதுனு தூக்கிடுவாங்க. ஒரு பாட்டுகாகவே தியேட்டர் போனா ஸ்லோவா இருக்குனு தூக்கிருபாங்க இல்லை பாட்ட ஒரு நிமிஷமா குறைச்சிடுவாங்க.
இப்படி எப்பவுமே எதோ ஒரு பாட்ட எடுக்கற தியேட்டர்கள்லாம் இருந்தது..இப்படி மாத்தி போட்டதால ஓடின ஓடாத இரண்டு படங்கள உதாரணத்திற்க்கு சொல்லலாம்.
AVM தயாரிப்பில் வெளியான மெல்ல திறந்தது கதவு படம் ரிலீஸாகி ரொம்ப ஸ்லோவாதான் எல்லா ஊர்லயும் போய்ட்ருந்துருக்கு.
மதுரையில் மட்டும் நல்லா ஓடிருக்கு. பிறகு நிறைய ஊர்ல கொஞ்சம் கொஞ்சமா ஓட என்னனு விநியோகஸ்த்தர்கள கூப்பிட்டு கேட்டா படத்தோட இரண்டாம் பகுதிய முதல்லயும் முதல் பகுதிய தூக்கி இரண்டாவதாகவும் மாத்தி மாத்தி போட்டு ஓட்ட ஆரம்பிச்சிருகாங்க.
விநியோகஸ்த்தர்கள் ஒருத்தருக்குள்ள ஒருத்தர் பேசி வைத்து கொண்டு மதுரையிலிருந்து இப்படி எல்லா ஊர்லயும் பண்ணியது தெரிய வர பின்னால பிரச்சனை வரக்கூடாதுனு படத்துக்கு First Half, Second Half மாத்தி காட்டி இன்னொரு சென்சார் வாங்கிருக்கு Avm நிறுவனம்.
இன்னொரு உதாரணமும் இதே Avm படம்தான் சம்சாரம் அது மின்சாரம் எல்லா ஊர்லயும் பிச்சுக்கிட்டு ஓடுது.ஒரு நெகட்டிவ் ரிவியூ கூட வரல.படம் ரிலீசான சில நாட்கள்ல விசு ஏதோ உடல் நிலை பிரச்சனையால ஆஸ்பத்திரி ஆஸ்பத்ரியா ஏரி இறங்கியுள்ளார்.
ஒரு மருத்துவமனையில் டெஸ்ட் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார் விசு.
அப்போ அங்க இருந்தவரு வந்து பேச்சு குடுத்துருக்காரு விசுவிடம்.
சம்சாரம் அது மின்சாரம் படம் பாத்தேன் சுமார்தான் பிடிக்கல எனக்குனு சொல்லிருக்காரு. ஏன் பிடிக்கலனு கேட்டதுக்கு படத்துல குடும்பத்துல அவளோ சண்டைக்கு அப்பறம் சட்டுனு மறந்துட்டு சேந்துட்டீங்க கிளைமாக்ஸ் சப்புனு இருந்துச்சுனு சொல்லிருக்காரு. இவருக்கு பயங்கர அதிர்ச்சி.
எந்த ஊர்ல படம் பாத்திங்கனு கேட்டதுக்கு குமாரபாளையத்துலனு சொல்லிருக்காரு அந்த நபர்.
இதை AVM ல சொல்லி விசாரிக்க சொன்னதுக்கு குமாரபாளையம் மட்டும் வசூல் கம்மியாருந்துருக்குனு தகவல்.
விசாரிச்சு பார்த்தபோது படத்தோட கிளைமாக்ஸ்ல Happy Ending வேனும்னு கோவிலிலேந்து விசு பலூனோட குழந்தைய தூக்கிட்டு வர காட்சியோட படத்தை முடிச்சி சுபம் போட்டு விட்டுருகாங்க.
கடைசில லக்ஷ்மி பேசற மொத்த காட்சியையும் தூக்கிடாங்க.கிளைமாக்ஸ் பெரிய பாதிப்பை தராம சப்புனு இருந்துருக்கு. இத மாதிரி நிறைய சம்பவங்கள் பண்ணிருகாங்க தியேட்டர்ல அந்த கால கட்டங்களில்.