தென்மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி.! துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்.!
தென்காசி

தென்மாவட்ட அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டி
தென்காசி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
தென்காசி, மே - 17
தென்காசி மாவட்டம் மேலமெஞ்ஞானபுரம் பகுதியில் மாவட்ட ரைபிள் கிளப் சார்பில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் துவக்கி வைத்தார்.
தென்காசி டிஸ்ட்ரிக்ட் ரைபிள் கிளப்பின் சார்பாக, தென் மாவட்டங்களுக்கு இடையேயான ஃபிரண்ட்லி இன்டர் டிஸ்டிரிக்ட் ஷூட்டிங் காம்பெடிஷன், தென்காசி மாவட்டம் மேலமெஞ்ஞானபுரத்தில் உள்ள தென்காசி டிஸ்ட்ரிக்ட் ரைபிள் கிளப்பில் வைத்து நடைபெற்றது.
இந்த துப்பாக்கி சுடும் போட்டியினை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்டத்தின் துணை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் பாபு கலந்துகொண்டு சிறப்புரை யாற்றினார்.
முன்னதாக தென்காசி டிஸ்ட்ரிக்ட் ரைபில் கிளப்பின் செகரட்டரி ரஷீத் அனைவரையும் வரவேற்று பேசினார். தமிழ்நாடு சூட்டிங் அசோசியேஷனின் செகரட்டரி எஸ்.வி.எஸ்.எஸ்.
வேல் சங்கர் விழாவிற்கு முன்னிலை வகித்தார். துப்பாக்கி சுடும் போட்டியில் திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராஜபாளையம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல் போன்ற தென் மாவட்ட ரைபிள் கிளப்புகளும், அந்த மாவட்டங்களில் உள்ள Mepco schlenk Engineering College போன்ற துப்பாக்கி சுடும் அகாடமிகளில் உள்ள மாணவர்களும் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.
இந்த போட்டி இரண்டு நாட்கள் நடக்க இருக்கிறது. துவக்க விழாவின் போது அர்னால்டு அரசு, சக்தி மணிகண்டன், ரிஸ்வி, கார்த்திகேயன், டாக்டர். ராம்குமார், டாக்டர். கிருத்திகா, ஜெய செந்தில் குமார், ஏ.ஜி.கணேஷ்குமார் மற்றும் பர்னபாஸ் கோவில்பிள்ளை, ஆண்டனி, டேவிட் ஆகியோர் உடன் இருந்தார்கள். விழா ஏற்பாடுகளை தென்காசி டிஸ்ட்ரிக்ட் ரைபிள் கிளப்பின் விழா ஒருங்கிணைப் பாளர் குழு சிறப்பாக செய்திருந்ததது. முடிவில் தென்காசி டிஸ்ட்ரிக்ட் ரைபிள் கிளப் செகரட்டரி ரஷீத் அனைவருக்கும் நன்றி கூறினார்.
செய்தியாளர்
AGM கணேசன்