போலீசார் ஒப்படைத்தது போலி வைரக்கல் - வைர வியாபாரி புகார்.!
குற்றம்

போலீசார் ஒப்படைத்தது போலி வைரக்கல் - வைர வியாபாரி புகார்
கடந்த 4 ஆம் தேதி வடபழனியில் வைர வியாபாரி சந்திரசேகர் என்பவரை கட்டிப்போட்டு ரூ.23 கோடி மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பல் திருடிச் சென்றது.
4 ஆம் தேதி இரவே 5 நபர்களை கைது செய்த போலீசார், 8 ஆம் தேதி நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்டவர்களையும் வைரக்கல்லையும் ஒப்படைத்தனர்
போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்த ரூ.23 கோடி வைரக்கல் போலியானது என வைர வியாபாரி காவல் ஆணையரகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
மேலும் காவல் நிலைத்தில் உண்மையான வைரக் கல்லை கேட்டபோது, போலீசார் மிரட்டியதாகவும் வைர வியாபாரி சந்திரசேகர் புகார் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.