வன்னியர் சங்க மாநாட்டில் பா.ம.க.நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் சிறப்புரை.!
வன்னியர் சங்க மாநாடு

வன்னியர் சங்கம் நடத்திய சித்திரை முழு நிலவு மாநாடு மாமல்லபுரத்தில் நடைபெற்றது.இதில் பாமக நிறுவனர் இராமதாஸ் தலைமை தாங்கி உரையாற்றினார்.நாம் 12 ஆண்டுகளுக்கு முன்பு கூடினோம்.
இப்போது மீண்டும் கூடுகிறோம். குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் என்று சொல்வார்கள். மகாமகம் அப்படி நடக்கும். மாவீரன் குரு இருந்திருந்தால் தொடர்ந்து இந்த மாநாட்டை நடத்தியிருப்பார். அவர் இல்லை என்ற ஏக்கத்துடன் இந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
முழு ஒத்துழைப்பு கொடுத்த அரசுக்கும், காவல்துறைக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம். 10.5 சதவீத இட ஒதுக்கீடு சொல்லிக்கொண்டே இருக்கிறீர்களே தவிர கொடுக்குற மாதிரி இல்லை. அதனால் போராட்டத்தை அறிவியுங்கள் என்று எதிர்பார்த்து வந்துள்ளீர்கள் என்று எனக்கு தெரியும்.
நிச்சயமாக போராட்டத்தை அறிவிப்போம். இதுவரை நடந்திராத போராட்டம் அதுவாகத்தான் இருக்கும். மயிலே மயிலே என்றால் இறகு போடாது. இந்த போராட்டத்திற்காக நாம் எவ்வளவு தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்.
45 ஆண்டுகாலமாக உங்களுக்காக இந்த மக்களுக்காக எல்லா சமுதாய மக்களுக்காக 324 சமுதாயங்கள் தமிழ்நாட்டில் உள்ளது. அத்தனை சமுதாய மக்களுக்காகவும் தொடர்ந்து உழைத்து வருபவன் ராமதாஸ். இந்தியாவிலே ஜெயகர் எழுதி புஷ்பவனம் குப்புசாமி பாடியிருப்பார். இதுவரை ஒரு மனிதரை கண்டதுண்டா? என்று எழுதியிருப்பார்கள். நானும் இப்போது கேட்கிறேன்.
34 வகையான அமைப்புகள், போராட்டங்கள், இட ஒதுக்கீடு போராட்ங்கள், சமூக நீதி போராட்டங்கள் இந்தியாவில் வேறு யாரும் செய்திருக்கிறார்களா? என்னைப் போல யாரும் இல்லை. ஆனால், நான் இந்த சமுதாயத்தில் பிறந்ததால் வெளிச்சம் போட்டு காட்ட யாரும் இல்லை. என்னைப் போன்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு, இந்திய மக்களுக்கு உழைத்த ஒரு தலைவரை கண்டதுண்டா? என்று புஷ்பவனம் குப்புசாமி பாடினாரே.
இந்தியாவிலேயே யாருமே இல்லை.இதை நான் பெருமையாக சொல்ல தயாராக இருக்கிறேன்.
45, 50 ஆண்டுகள் உங்களுக்காக தொடர்ந்து உழைத்து வருகிறேன். 95 ஆயிரம் கிராமங்கள் தமிழ்நாடு முழுவதும் என் கால் படாத கிராமங்களே இல்லை. ஓடி ஓடி உழைத்தேன். குடும்பத்தை மறந்தேன்.
5 நாள் சம்பாதித்து 3 ரூபாய்க்கு ஊசி போட்டு வீட்டிற்கு கொடுத்துவிட்டு, ஊர் ஊராக சென்று சாப்பாடு இல்லாமல் இரவு பகலாக இந்த மக்களுக்காக பாடுபட்டேன்.பாடுபடுகிறேன். ஆனாலும் இந்த மக்கள் நன்றியுள்ள மக்கள்.
நாமும் ஒரு முறை தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று என் பேச்சை கேளுங்கள்.
நான் ஆளப்போவதும் இல்லை. எனக்கு அந்த ஆசையும் இல்லை.
அந்த ஆசை இருந்திருந்தால் நான் ஆளுநராக இருந்திருப்பேன். இந்தியாவிலே பல முறை அமைச்சராக இருந்திருப்பேன்.தமிழ்நாட்டையும் ஆண்டிருப்பேன். அனைத்தையும் செய்திருப்பேன்.எனக்கு அந்த ஆசை இல்லை. மக்களுக்காக வாழ்ந்தேன். உங்களுக்காக வாழப் போகிறேன் என மருத்துவர் இராமதாஸ் மாநாட்டில் உரையாற்றினார்.