அகரக் கட்டில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்.!

தென்காசி

அகரக் கட்டில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்.!

அகரக் கட்டில் தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்

தென்காசி மே 01


தென்காசி மாவட்டம் அகரக்கட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில்
வைத்துதமிழ்நாடு நாடார் உறவின் முறைகள்
ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  மாநில தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் பேசும் போது, 

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு முதன் முதலாக ஜாதி வாரி  கணக்கெடுப்பு  நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஜாதி வாரி கணக்கெடுப்பில் பல்வேறு சிக்கல்களும் பிரச்சனைகளும் குழப்பங்களும் இருக்கும் என்ற காரணத்தினால் இதுவரை எந்த அரசும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முன்வரவில்லை.

தற்போது பாரத பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு ஜாதி வாரியான கணக்கெடுப்பு நடத்த  முன் வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நாடு முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் மட்டும்தான் அந்தந்த ஜாதியை சேர்ந்தவர்களுக்கு உரிய பிரநிதித்துவம் கிடைக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பின் படி தான் ஒரு காலத்தில் தனி தொகுதிகள் பிரிக்கப்பட்டது.  

நாடு முழுவதும் சுமார் 78 ஆண்டுகளுக்கு முன்பு எந்த தொகுதி தனித்தொகுதி என்று அறிவிக்கப்பட்டதோ இப்போது வரை அந்த தொகுதியே தனித் தொகுதியாக   இருந்து வருகிறது. நம்முடைய நாடார் சமுதாய மக்கள் ஜாதி வாரி கணக்கெடுப்பின்போது இந்து நாடார் கிறிஸ்தவ நாடார் கிராமணி நாடார் என்று  குறிப்பிடாமல்  அனைவரும் நாடார் என்று பதிவு செய்ய வேண்டும் குறிப்பாக கிறிஸ்தவ நாடார்கள் இந்து  நாடார்கள் என்று குறிப்பிடாமல் நாடார்  என்று பதிவு செய்ய வேண்டும். தமிழகத்தில் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் சிறுபான்மையினர் என்று அழைக்கின்ற மத்திய மாநில அரசுகள் இஸ்லாமியர்களுக்கு மட்டும் தான் 3.5%     சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் கிறிஸ்தவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு கிடையாது 
 

கிறிஸ்தவ மதத்திற்க்குள்ளே   கூடுதலாக தலித் கிறிஸ்தவர்கள் என்ற ஒரு ஜாதி பிரிவை புதியதாக கிறிஸ்தவ  மதத்திற்க்குள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்  எந்த கிறிஸ்தவ ஆயர்களும் கிறிஸ்தவ அமைப்புகளும் சிறுபான்மையினர்கள் என்று இஸ்லாமியர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவது போல கிறிஸ்தவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கேட்கவில்லை.

கிறிஸ்துவ மதத்திற்குள் இருக்கும் நாடார்களும் இந்து மதத்தை சேர்ந்த நாடார்களும் நம் சமுதாயத்திற்கான இட ஒதுக்கீடு நமக்கு சரியாக கிடைக்க வேண்டும் என்றால் 
 மதங்களுக்கு அப்பாற்பட்டு நாடார் என்று மட்டும் ஜாதி வாரி கணக்கெடுப்பில் குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இந் நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் சுப்ரமணியன் மாநில இளைஞர் அணி துணைத் தலைவர் மதிவளன் நாடார் தென்காசி மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி நாடார் மத்திய மாவட்ட தலைவர் முருகன் நாடார் தெற்கு மாவட்ட தலைவர் ராஜ் நயினார் நாடார் விஜயன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்