இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக என்றும் துணையாக இருக்கும் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி. !

கிருஷ்ணகிரி

இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக என்றும் துணையாக இருக்கும் என அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி. !

இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக என்றும் துணையாக இருக்கும் என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் K P முனுசாமி எம் எல் ஏ, தெரிவித்துள்ளார்

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக துணை பொதுச் செயலாளருமான KP முனுசாமி கலந்துக் கொண்டு நல திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அப்போது பேசிய அவர். தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த போதெல்லாம் இஸ்லாமிய மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகிறது.

ரம்ஜான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்களை வழங்கி உதவிகளை செய்து கொடுப்பது அதிமுக தான். இஸ்லாமிய மக்களுக்கு உதவிகளையும் பாதுகாப்பையும் கொடுத்து வருகிறோம். இதே போல் நீங்கள் என்றும் அதிமுகவுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் அசோக்குமார் எம் எல் ஏ, அம்மா பேரவை மாநில துணை செயலாளர் வி பன்னீர்செல்வம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் தமிழ்செல்வம், வேப்பனஹள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி கிழக்கு ஒன்றிய செயலாளர் சைலேஷ் கிருஷ்ணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் களில் பாய்,சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு வெங்கடாஜலம்,எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கார்த்திக் பால்ராஜ், எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளர் பொய்யாமொழி, எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் ஜெய் பிரகாஷ்,தொழில் சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணை செயலாளர் சசிகுமார், கிருஷ்ணகிரி மேற்கு கிழக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கழகத் தோழர்கள் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ