உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் துவக்கி வைத்து முகாமை பார்வையிட்டார்.!
கிருஷ்ணகிரி

இராமசந்திரம் கிராமத்தில் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் துவக்கி வைத்து முகாமை பார்வையிட்டார்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி, நாடுவனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட இராமசந்திரம் அரசு நடுநிலைப் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது.
நாடுவனப்பள்ளி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி வளர்மதி குணசேகரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மேற்குமாவட்ட திமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் மற்றும் மேற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளரும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினருமான முருகன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு தமிழக அரசின் சிறப்பு மிக்க திட்டங்களின் ஒன்றான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
பின்னர் நாடுவானப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இந்த முகாமில் அனைத்து அரசு துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன.
மேலும் இந்த முகாமில் நாடுவனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலைஞரின் மகளீர் உரிமை தொகை, வீட்டுமனைப்பட்டா, இலவச மருத்துவ காப்பீட்டு திட்டம், கல்விக் கடன், ரேசன் அட்டை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை தீர்வு காண வேண்டி துறைவாரியாக மனுக்களை சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் வழங்கினார்கள்.
மேலும் இந்த சிறப்பு முகாமில் தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டது. இந்த முகாம் மூலம் நாடுவனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஏழை எளிய மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.
இந்த முகாமில் வேப்பனஹள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர்களான சதீஷ்பாபு, சீராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ