தமிழகத்தில் நான்கு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக முதல்வருக்கு  டாக்டர் சந்திரமோகன் பாராட்டு..!!

கிருஷ்ணகிரி

தமிழகத்தில் நான்கு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக முதல்வருக்கு  டாக்டர் சந்திரமோகன் பாராட்டு..!!

மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நுகர்வோர் காலாண்டு நுகர்வோர் குழுக் கூட்டத்தில் தமிழகத்தில் நான்கு ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் தமிழக முதல்வருக்கு  டாக்டர் சந்திரமோகன் பாராட்டு.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமாரின் உத்தரவின் பெயரில்
மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நுகர்வோர் காலாண்டு குழுக் கூட்டம் நடைபெற்றது.

மத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி சாவித்திரி தலைமையில் நடைப்பெற்ற இந்தக் கூட்டத்திறகு சமூக நுகர்வோர் பாதுகாப்பு நல சங்க மாநில பொது செயலாளர் டாக்டர் சந்திரமோகன் கலந்து கொண்டு பேசினார்,

அப்போது மத்தூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் சரியாக திறப்பதில்லை. மத்தூர் சுற்று வட்டார கிராமங்களில் அடிக்கடி மின்வெட்டு செய்வதாகவும், இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சாலைகளில் அதிகளவு மாடுகள், நாய்கள் சுற்றி திரிவதால், விபத்துகள் ஏற்படுகிறது. 

அதேபோல் கிராமங்களில் போலி மருத்துவர்கள் அதிகரித்து உள்ளதை தடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.  தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக மக்கள் திட்டப்பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக முதல்வருக்கு தனது பாராட்டினையும் தெரிவித்துக் கொண்டார்.

அப்போது மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்து துறை அலுவலர்கள் திருமதி ஜெர்லி மார்க்ரெட், திருமதி வைரமணி, மகளீர் ஊர்நல அலுவலர்கள் மேகலா, கல்யாணி மற்றும் மத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி வசந்தா, அங்கன்வாடி கண்காணிப்பாளர் பூராதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ