தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் டி என் யு நாகராஜனின் 24 வது ஆண்டு நினைவு தினம்.!
தென்காசி

தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் டி என் யு நாகராஜனின் 24 வது ஆண்டு நினைவு தினம்
தென்காசி மே 20
தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் அகரக்கட்டு லூர்து நாடார் தலைமையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை நாடார் சமுதாயத்திற்கு முழுமையாக மீட்பதற்கு முதன் முதலில் மீட்பு குழுவை உருவாக்கிய டிஎன்யூ நாகராஜனின் 24 வது ஆண்டு நினைவு நாள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அகரக்கட்டு லூர்து நாடார் கலந்து கொண்டு பேசும் போது தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை 1994 ஆம் ஆண்டுக்கு முன்பு எஸ் ஆர் நிறுவனமானது முழுமையாக கைப்பற்ற நினைத்தது இந்த உண்மை செய்தியை மறைந்த தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி இயக்குனர் சிவன் நாடார் டிஎன்யூ நாகராஜன் அவர்களிடத்திலே சொல்லி இருக்கிறார்.
இதனை அறிந்த டிஎன்யூ நாகராஜன் இந்தியா முழுவதும் உள்ள நாடார் சமுதாய தொழிலதிபர்கள் வணிகர்களை ஒன்று சேர்த்து நாடார் சமுதாயத்திற்கு சொந்தமான தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி ஒருபோதும் மாற்றான் கைக்கு போய் விடக்கூடாது என்று சொல்லி சமுதாய பெரியவர்களை ஒன்று திரட்டி முதன் முதலில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி மீட்பு குழு உருவாக்கிய பெருமைக்குரியவர் முதல் மீட்பு குழுவில் எஸ் சி பாண்டியனார் தலைவராகவும் டிஎன்யூ நாகராஜன் செயலாளராகவும் அருணாசலம் பொருளாளராகவும் இருந்து மிகவும் சிறப்பாக செயல் பட்டனர்.
இவர் அன்றைய கால கட்டத்தில் வங்கி பற்றிய செய்தியை வெளியில் சொல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி எஸ் ஆர் நிறுவனத்திடம் இருந்து நாடார் சமுதாயத்திற்கு வந்திருக்காது மேலும் தன் தொழில் குடும்பத்தை விட சமுதாயத்தை அதிகமாக நேசித்தவர்.
மேலும் ராயபுரத்தில் நாடார்கள் உதவி சங்கத்தில் இராமச்சந்திர ஆதித்தனார் வாழ்நாள் கௌரவ தலைவராக இருந்தார்.
இந்த சங்கத்தில் பொது சேவையின் இமயம் டிஎன்யூ நாகராஜன் கொள்கை பரப்புச் செயலாளராக சேவை செய்தார்.தன்னைத் தேடி வந்து உதவி கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாத வள்ளல் குணம் கொண்டவர்.
அதனால் தான் நாடார் சமுதாய மக்களால் சமுதாய பெரியவர்களால் பொதுசேவையின் இமயம் என்று அடைமொழி சொல்லி அழைக்கப்பட்டவர் என்று பேசினார்.
இந் நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் சுப்பிரமணியன் தென்காசி மேற்கு மாவட்ட தலைவர் குருசாமி நாடார் தென்காசி மாவட்ட கல்வி குழு செயலாளர் முப்புடாதி கடையநல்லூர் ஒன்றிய தலைவர் மணிகண்டன் ஜான் செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்