அரசு மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம்
கிருஷ்ணகிரி

தமிழக அரசு நாட்டு நலப்பணி திட்ட முகாம் எல்லா அரசு பள்ளிகளிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டிணம் ஒன்றியம், பாருர் அரசு மேல்நிலைபள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.
அரசு உயர்நிலைபள்ளி நாட்டாண்மைக்கொட்டாய், அறிவியல் பட்டதாரி ஆசிரியர், தேசிய பசுமைபடை பள்ளி ஒருங்கிணைப்பாளர்,
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டதலைவர் சாந்தி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு முகாமில் பங்கு பெற்ற மாணவிகளுக்கு கிராமத்தூய்மை, ஆளுமைத்திறன், பன்முகதிறன், தனித்திறன் வளர்த்தல், உள்ளார்ந்த "திறன், நுண்ணறிவு வளர்த்தல், சுற்றுசூழல் கல்வி , தன் சுத்தம் போன்ற தலைப்புகளில் கருத்துக்களை எடுத்துரைத்தார்.
மரம் நடுவதன் அவசியம், காடுகள் பாதுகாப்பு, ஓசோன் பாதுகாப்பு, நீர் சேமிப்பு, இயற்கை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மழை பற்றிய பாடல் பாடி உற்சாகப் படுத்தினார்
பள்ளி தலைமையாசிரியர் முரளி, கேம்ப் அலுவலர், சித்தமருத்துவர், போச்சம்பள்ளி வட்டார வட்டாட்சியர் திருமதி சத்யா உள்ளிட்ட பலரும் முகாமில் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
மாருதி மனோ