இளையராஜாவை ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் மண்டபத்தினுள் விடாமல் தடுத்த விவகாரம் - கோவில் நிர்வாகம் விளக்கம்
தமிழகம்

ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் கருவறை மண்டபத்தில் இருந்து இசைஞானி இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இசைஞானி இளையராஜா
1970களில் வெளியான அன்னக்கிளி எனும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இளையராஜா ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்துள்ளார். அதுமட்டுமல்ல அவர் சிறந்த பாடலாசிரியரும் கூட. இவரது கலைத் திறமையை பாராட்டி, அவருக்கு இந்திய அரது பத்ம் பூஷன் மற்றும் பத்ம விபூஷன் விருதை வழங்கியது. மேலும் தேசிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, இசைஞானி எனும் பட்டம், தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, முனைவர் பட்டம் என பல விருதுகளை குவித்துள்ளார்.
இவர் தமிழ்நாடு அரசின் விருதுகள் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். பல்வேறு சர்வதேச விருதுகளையும் பெற்று அதிக விருதுகள் பெற்ற ஒரே இசையமைப்பாளர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில்
ஶ்ரீவில்லிப் புத்தூர் ஆண்டாள் கோவில் கருவறையின் முன்புள்ள மண்டபத்தில் இருந்து இசைஞானி இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது
இன்று ஆண்டாள் கோயிலில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபம் பகுதியில் ஜீயர்களுடன் இளையராஜாவும் உள்ளே செல்ல முயன்றார். அப்போது அவர் தடுத்து நிறுத்தப்பட்டது மிகப்பெரிய விஷயமாக மாறியது.
இந்நிலையில், ஆண்டாள் கோயிலில் கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபம் பகுதியையும் கருவறை போன்றே பாவித்து வருகிறோம். அர்த்த மண்டபத்திற்குள் ஜீயர்களை தவிர பொதுமக்களுக்கு அனுமதி தரப்படுவது இல்லை.
சம்பவத்தன்று ஜீயர் உடன் இளையராஜாவும் அர்த்த மண்டபத்தில் தவறுதலாக நுழைந்து உளளார் என கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
கோவில் நிர்வாகம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டாலும் தற்போது இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடதக்கதாகும்.