பதற்ற நிலை நீடிப்பு 40,000 நேரடியாக களமிறக்கம்.! அமெரிக்கா நேரடியாக அமெரிக்கா. !

இஸ்ரேல் - ஈரான் போர்

பதற்ற நிலை நீடிப்பு 40,000 நேரடியாக களமிறக்கம்.! அமெரிக்கா நேரடியாக அமெரிக்கா. !

ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் 7 வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. பதற்றம் குறையாமல் நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இஸ்ரேலை ஆதரிக்க அமெரிக்கா நேரடியாக களமிறங்குமா?

என்ற கேள்வி உலக அரங்கில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. ஏனெனில் அமெரிக்க அதிபர் டிரம்ப், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு முழு ஆதரவு அளிக்கவில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்தாலும், அமெரிக்காவின் இராணுவ நகர்வுகள் மற்றும் டிரம்பின் அறிக்கைகள் பார்க்கும்போது அவரும் போரில் இறங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
குறிப்பாக சொல்லவேண்டும் எனில் ஜூன் 18ம் தேதி வெள்ளை மாளிகையில் நடந்த தேசிய பாதுகாப்பு கூட்டத்தில், ஈரானின் ஃபோர்டோ அணு ஆயுத மையத்தை 30,000 பவுண்டு 'பங்கர்-பஸ்டர்' குண்டுகளை பயன்படுத்தி தாக்குவது உட்பட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. அப்போது டிரம்ப், "நான் இதை செய்யலாம், செய்யாமலும் இருக்கலாம். யாருக்கும் என் முடிவு தெரியாது," என செய்தியாளர்களிடம் கூறியிருந்தார். அவரது முடிவு இன்னும் உறுதியாகவில்லை என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.

அமெரிக்கா இதுவரை நேரடி தாக்குதல்களில் ஈடுபடவில்லை என்றாலும் கூட இஸ்ரேலுக்கு பாதுகாப்பு ஆதரவு அளித்து வருகிறது என்பது தெரிந்த ஒரு விஷயம் தான். இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவிய ஏவுகணைகளை தடுக்க அமெரிக்க இராணுவம் உதவியது. அப்படி இருந்தாலும் கூட எங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போலவே தெரிவித்து வந்தது. ஈரானை "முழு சரணடைய" வலியுறுத்திய அவர், "ஈரானுக்கு அணு ஆயுதம் இருக்கக்கூடாது என எச்சரிக்கை விடுத்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் எப்போதும் சரணடையாது அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டால் சரிசெய்ய முடியாத பெரும் சேதத்தை சந்திக்கும் எனவும் அறிவித்திருந்தது.

இதனையடுத்து, இன்று காலை முதல் டிரம்ப் நேரடியாக இந்த போரில் இறங்க முடிவு செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஈரானின் எச்சரிக்கையை தொடர்ந்து மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்களில் 40,000க்கும் மேற்பட்ட வீரர்கள் உயர் எச்சரிக்கை நிலையில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
மேலும், அமெரிக்கா USS நிமிட்ஸ் விமானம் தாங்கி கப்பலை மத்திய கிழக்குக்கு அனுப்பியுள்ளது. அது மட்டுமின்றி, 30க்கும் மேற்பட்ட விமான எரிபொருள் நிரப்பு விமானங்களை ஐரோப்பாவுக்கு அனுப்பியுள்ளது. இஸ்ரேலுக்கு அரணாக களமிறங்குகிறதா? அல்லது நேரடியாக அமெரிக்கா இந்த போரில் இறங்க போகிறதா? என்பது குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது.