43 வது தென்னிந்திய கராத்தே போட்டியில் துரை மாடன் பள்ளி (சிபிஎஸ்இ) மாணவர்களுக்கு சிறப்பு கிராண்ட் சாம்பியன் பரிசு .!
கிருஷ்ணகிரி

43 வது தென்னிந்திய கராத்தே போட்டியில் துரை மாடன் பள்ளி (சிபிஎஸ்இ) மாணவர்களுக்கு சிறப்பு கிராண்ட் சாம்பியன் பரிசு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்ற 43 வது தென்னிந்திய கராத்தே போட்டியில் துரை மாடன் பள்ளி (சிபிஎஸ்இ) மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கு அதியமான் கல்வி நிறுவனர் சீனி திருமால் முருகன் ஐவிஎல் கல்வி நிறுவனர் கோவிந்தராஜ் மற்றும் முதன்மை நடுவர் சிகான் நடராஜ் மற்றும் மாரியப்பன் கராத்தே மாஸ்டர் அவர்கள் சான்றுதலும் பதக்கங்களும் வழங்கினார்கள். பள்ளிக்கு சிறப்பு கிராண்ட் சாம்பியன் கேடயம் தரப்பட்டது .
அப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சி அளித்த கராத்தே மாஸ்டர் எம்.கே.மாரியப்பன் அவர்களுக்கும் பள்ளி நிர்வாகத்தின் சார்பாக பள்ளி நிறுவனர் து.மணி பள்ளி தாளாளர் ம.சத்தியமூர்த்தி மற்றும் நிர்வாக இயக்குனர் அ.சிந்து மற்றும் பள்ளி முதல்வர் மதிப்புறு முனைவர் இ. ரவிந்தர் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ