ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி திருக்கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை. .!

கிருஷ்ணகிரி

ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி திருக்கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை. .!

ஓசூர் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி திருக்கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை. வெள்ளிக் கவசத்தில் காட்சி அளித்த அம்மன்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மோரணப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி திருக்கோயிலில் இன்று ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. 

மூலவர் அம்மனுக்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் இளநீர் திருநீறு, பஞ்சாமிர்தம், பால் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னர், அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவித்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்து அருள் பாலித்தார். தொடர்ந்து அம்மனுக்கு மகா மங்கள ஆரத்தி தீபாராதனைகள் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ