குடியிருப்பில் அனைத்து சமுதாய மக்கள் சார்பில் சிசிடிவி கேமரா .!

தென்காசி

குடியிருப்பில் அனைத்து சமுதாய மக்கள் சார்பில் சிசிடிவி கேமரா .!

குடியிருப்பில் அனைத்து சமுதாய மக்கள் சார்பில் சிசிடிவி கேமரா 

டிஎஸ்பி பாஸ்கர் பாபு துவக்கி  வைத்தார்

தென்காசி மே 18

தென்காசி மாவட்டம் குடியிருப்பில் அனைத்து சமுதாய மக்களின் சார்பில்
சி சி டிவி கேமரா துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடை பெற்றது இந் நிகழ்ச்சிக்கு தென்காசி காவல் துணை கண்காணிப்பாளர்
பொறுப்பு பாஸ்கர் பாபு தலைமை வகித்து 17 சிசிடிவி கேமராவினை தொடங்கி வைத்தார். மேலகரம் பேரூர் தலைவர் வேணி வீரபாண்டியன் முன்னிலை வகித்தார்.

இந் நிகழ்ச்சியில் குற்றாலம் காவல் ஆய்வாளர் முத்து கணேஷ், காவல் உதவி ஆய்வாளர்கள்
கார்த்திக், மாணிக்க செல்வி, மேலகரம் பேரூர் திமுக செயலாளர் சுடலை, கவுன்சிலர் முகிலன், வழக்கறிஞர் கார்த்திக் குமார், அனைத்து சமுதாய தலைவர்கள் பாலசுப்பிரமணியன் ,சங்கரலிங்கம், சிதம்பரம் பிள்ளை, கணேசன், காந்தி, முருகேசன் ஆசாரி, கிருஷ்ணன், ஆனந்தராஜ், இசக்கிமுத்து, மாடசாமி என்ற செல்லத்துரை சரவணன் சுடலை மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

AGM கணேசன்