குற்றாலத்தில் தமிழக வணிகர் சம்மேளனம் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் .!

தென்காசி

குற்றாலத்தில் தமிழக வணிகர் சம்மேளனம் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் .!

குற்றாலத்தில் தமிழக வணிகர் சம்மேளனம் நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

தலைவர் தமிழ்ச்செல்வம் பங்கேற்பு

தென்காசி செப் 09

தென்காசி மாவட்டம், குற்றாலம், தனியார் ஹோட்டலில் வைத்து தமிழக வணிகர் சம்மேளனம் நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக வணிகர் சம்மேளன தலைவர் தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தார்.

மாநில செயற்குழு தலைவர் மாரியப்பன் பொதுச் செயலாளர் நாகராஜன், மாநில மகளிர் அணி செயலாளர் பானுமதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் ஜீவானந்தம் வரவேற்புரை ஆற்றினார்.

இக்கூட்டத்தில் அடையாள அட்டை, நியமனச் சான்றிதழ் வழங்கி, அமைப்பின் வெப்சைட் வெளியிட்டு மாநில தலைவர் சிறப்புரை ஆற்றினார்.

அதனைத் தொடர்ந்து அமைப்பின் கொடி அறிமுகம் செய்யப் பட்டது.இதில் ஜிஎஸ்டி குறைப்பிற்கு மத்திய அரசிற்கு நன்றி தெரிவித்தும், 
24 மணி நேரம் கடை திறக்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி,மாநகராட்சிகளில் உள்ள கடைகள் மற்றும் அரசு சொத்துக்களை ஏலம் விடுவதில் கமிட்டியில் வணிகர்களை இணைத்தமைக்கு தமிழக அரசிற்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர்கள் அப்துல் கனிராஜா, முகமது ஷாஜகான்,

வழக்கறிஞர் செல்லத்துரை பாண்டியன்,மாநில துணை செயலாளர்கள் பன்னீர்செல்வம், ரங்கநாதன், மாநில அமைப்பு செயலாளர் கௌரி சங்கர், மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர்கள் உமா மாரிமுத்து, பட்டுமகேஷ், உமா மகேஸ்வரி, திருச்சி மண்டல செயலாளர் நடராஜன், தமிழ் மருத்துவ அணி மதுரை மண்டல செயலாளர் கணேசன் மாவட்ட செயலாளர்கள் தினகரன், பால சுப்பிரமணியன் உள்ளிட்ட மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென்காசி வடக்கு மாவட்ட தலைவர் அமானுல்லா அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர்

AGM கணேசன்