தென்காசி ரயில் நிலையத்தில் பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி .!
தென்காசி
தென்காசி ரயில் நிலையத்தில் பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
தென்காசி ஆகஸ்ட் 25
இருப்பு பாதை காவல்துறை இயக்குனர், காவல்துறை தலைவர்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடியும், இருப்பு பாதை காவல் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் இருப்புப் பாதை காவல் ஆய்வாளர் அறிவுரை படியும், தென்காசி ரயில் நிலையத்தில் வைத்து பெண்கள், மற்றும் பெண் குழந்தைகளை, பாதுகாப்பது பற்றியும், ரயிலில் பயணம் செய்யும் போது எவ்வாறு விழிப்புணர்வோடு செல்ல வேண்டும் என்றும், பாலியல் தொந்தரவு, திருட்டு, விபத்து சம்பந்தமான அறிவுரைகளையும் வழங்கி பெண் பயணிகளை வைத்து தென்காசி இருப்பு பாதை காவல் நிலைய உதவி ஆய்வாளர் கற்பகவிநாயகம் மற்றும் காவல் ஆளிநர்களை வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்.

செய்தியாளர்
AGM கணேசன்
