500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திரெளபதி அம்மன் திருக்கோவிலில்  நடைப்பெற்ற துரியோதனன் வதம் செய்யும் விழா.!

கிருஷ்ணகிரி

500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திரெளபதி அம்மன் திருக்கோவிலில்  நடைப்பெற்ற துரியோதனன் வதம் செய்யும் விழா.!

ஒரப்பம் கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு திரெளபதி அம்மன் திருக்கோவிலில்  நடைப்பெற்ற துரியோதனன் வதம் செய்யும்  விழாவில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள ஒரப்பம் கிராமத்தில் சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த திரௌபதி அம்மன் திருக்கோவில் உள்ளது, இந்த திருக்கோவிலில் ஆண்டுத் தோறும் ஒரப்பம், சின்ன ஒரப்பம், நாகனப்பள்ளி, சுண்டம்பட்டி, சின்ன சுண்டம்பட்டி ஆகிய 5 கிராம மக்கள் இணைந்து அக்னி வசந்த மகோத்சவ பெருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது.

இவ்விழாவில் நாள்தோறும் தர்மபுரி மாவட்டம் பெரிய மாரியம்மன் நாடக குழுவினர்கள் சார்பில் பாஞ்சாலி திருக்கல்யாணம், அர்சுணன் தவசு, அரவாண் கடபலி, அரக்கு மாளிகை உள்ளிட்ட பல்வேறு இதிகாச நாடகங்களும் நடைபெற்று வந்தன.

கடந்த 18 நாட்களாக நடைபெற்று வந்த அக்னி வசந்த உற்சவ விழாவின் கடைசி நாளான இன்று துரியோதனன் வதம் செய்யும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதற்காக கோவில் அருகாமையில் சுமார் 30 அடி நீளத்தில் களிமண்ணால் துரியோதனன் உருவம்  செய்யப்பட்டு அங்கு துரியோதனன் வதம் செய்யும் நிகழ்வு நடத்தப்பட்டது,

இதில் துரியோதனன் மற்றும் வீமன் வேடம் புரிந்த இரண்டு பேர்களும் சட்டையிடும் காட்சியும் நடைபெற்றது. இறுதிப்போரில் வீமனை துரியோதனனை வதம் செய்யும் நிகழ்வினை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்து வழிபட்டனர், இந்த விழாவினைத் தொடர்ந்து பக்தர்கள் தலையில் துடப்பத்துடன் தலையில் அடி வாங்கி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஒரப்பம், சின்ன ஒரப்பம், நாகனப்பள்ளி, சுண்டம்பட்டி, சின்ன சுண்டம்பட்டி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த ஊர் கவுண்டர்கள் மற்றும் மக்களும் இணைந்து சிறப்பாக செய்து இருந்தனர்.

செய்தியாளர்

மாருதி மனோ