கிருஷ்ணகிரி அரசு மேல் நிலைப் பள்ளியில் பயிலும் 130 மாணவ - மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கிய அமைச்சர் அர.சக்கரபாணி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம், ஊராட்சி ஒன்றியம், பையூர் ஊராட்சி, நடுப்பையூர் அரசு மேல் நிலைப் பள்ளியில் பயிலும் 130 மாணவ - மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கி சிறப்புரையாற்றினார் அமைச்சர் அர.சக்கரபாணி.
இந்நிகழ்வின்போது பருகூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு இ.ஆ.ப, உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
மாருதி மனோ