திருமாவளவன் சமீப காலங்களாக நிகழ்ச்சிகளில் கருத்து தெரிவித்து வருவது திமுக - விடையே அதிருப்தி. !
விடுதலை சிறுத்தைகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமீப காலங்களாக நிகழ்ச்சிகளில் கருத்து தெரிவித்து வருவது திமுகவினர் இடையே அதிருப்தி ஏற்ப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கும் முன்பு வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர் கூட்டணி, தேர்தல், தொகுதி பங்கீடு என்பதெல்லாம் வேறு கட்சியின் கொள்கை என்பது வேறு. தேர்தலில் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பது முக்கியமில்லை கொள்கையில் உறுதியாக இருக்கிறோமா என்பதுதான் முக்கியம். 2026 சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு இதையெல்லாம்விட முக்கியம் தேசம் தான் என குறிப்பிட்டு பேசியிருந்தார்.
சீட்டுகளை பேரம் பேசும் கட்சி விசிக கிடையாது:
இது ஒரு பக்கம் இருக்க ஜூன் 24 2025 தேதியான நேற்று முன்தினம் சென்னையில் விசிகவின் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதிலும் இதே போன்ற கருத்துக்களை தெரிவித்திருந்தார். அதாவது, " நாடாளுமன்ற, சட்டமன்ற சீட்டுகளை பேரம் பேசும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி கிடையாது. நாற்காலியில் எ எனக்கு நம்பிக்கை இல்லை பிளாஸ்டிக் சேர், தரையில் கூட நான் அமருவேன். தேர்தலில் போட்டியில்லை எனக் கூட நான் அறிவித்து விடுவேன்" என பேசி இருந்தார். அதனைத் தொடர்ந்து ஜூன் 25 2025 தேதியான நேற்று மீண்டும் இதே கருத்தை அவர் பதிவு செய்துள்ளார். ஆனால் அதற்கு விளக்கமும் அளித்திருந்தார்.