நண்பர்களுக்குள் வசூல் எவ்வளவு என கேட்டு பேசியது கொலையில் முடிந்தது.! ஒருவர் மரணம் - ஒருவர் சிறை. !

சென்னை

நண்பர்களுக்குள் வசூல் எவ்வளவு என கேட்டு பேசியது கொலையில் முடிந்தது.! ஒருவர் மரணம் - ஒருவர் சிறை. !

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலூக்கா பூலாம்பட்டியை சேர்ந்தவர் விஜய்காந்த் ( 33 ). இவர் சென்னை எம்.ஜி.ஆர் பகுதியில் குடியிருந்து கொண்டு ஷேர் ஆட்டோ வாடகைக்கு ஓட்டி வருகிறார்.

இவர் நேற்று முன்தினம் (28.04.2025) இரவு சவாரி முடித்து கே.கே.நகர் ராஜமன்னார் சாலை, முனுசாமி சாலை சந்திப்பில் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருந்த போது , விஜயகாந்த் அங்கு ஆட்டோவில் இருந்த அறிமுகமான தங்கம் என்பவரிடம் இன்று ஷேர் ஆட்டோ வசூல் எவ்வளவு என்று கேட்ட போது , தங்கம் என்னுடைய வசூலை நீ ஏன் கேட்கிறாய் என கோபமாக கெட்ட வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இதனால் இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த தங்கம் , விஜயகாந்தை கையால் தாக்கி கீழே தள்ளி , காலால் மார்பில் எட்டி உதைத்துள்ளார்.

காயமடைந்த விஜயகாந்தை அருகிலிருந்தவர்கள் மீட்டு கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் விஜயகாந்த் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சண்முகம் ( வயது 51 ) என்பவர் R-7 கே.கே நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

R-7 கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , கொலை வழக்கில் தொடர்புடைய தங்கம் என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில் தங்கம் மீது ஏற்கனவே 4 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்துள்ளது. விசாரணைக்குப் பின்னர் தங்கம் இன்று (30.04.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

ஆசிரியர் & வெளியீட்டாளர்

மேட்டுப்பாளையம் Rafi ( MR )