மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாத் பேரவை சார்பாக வஃபு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து ஆர்ப்பாட்டம். !
மேட்டுப்பாளையம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வஃபு திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து ஐக்கிய ஜமாத் தலைவர் சரீப் ஹாஜியார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் அக்பர் அலி வரவேற்புரை வழங்கி துவக்கி வைத்தார்.
முகமது இலியாஸ் இமாம் கண்டன உரை நிகழ்த்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய ஜமாத் நிர்வாகிகள் மற்றும் மேட்டுப்பாளையம் அனைத்து பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மேலும் அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 ற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் தமுமுக -வினரும் போராட்டக்காரர்களும் ஊட்டி மெயின்ரோடு பகுதியில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்னகாமனன் தலைமையிலான போலீசார் தபால் நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களை தடுத்து கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
ஆசிரியர் & வெளியீட்டாளர்
மேட்டுப்பாளையம் Rafi ( MR )